<div dir="ltr">அனைவருக்கும் வணக்கம்,<br><br> தமிழ்நாட்டின் கட்டற்ற மென்பொருள் குழுமம் "கட்டற்ற மென்பொருளின்" 25-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை இரஷ்யன் கலையரங்க மையத்தில் 21 தேதி ஞாயிற்று கிழமை, நடத்தியது,<br><br>இவ்விழாவிற்கு "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் , "பிராபிர் புர்காஷ்தா" தில்லி அறிவியல் குழம செயலாளர் மற்றும் "கிரன் சந்திரா" கட்டற்ற மென்பொருள் குழமம், இந்தியா ஆகியோர் வருகை தந்திருந்தார்கள்.<br>
<br>உபுனண்டு தமிழ் குழுமம் மற்றும் சென்னை லினக்ஸ் குழுமம் சார்பாக "கட்டற்ற மென்பொருள்" புத்தகத்தினை தமிழில் அதன் ஆசிரியர் ஸ்ரீ மா.ராமதாஸ் முதல் பிரதியை வெளியிட பிராபிர் புர்காஷ்தா. கிரன் சந்திரா மற்றும் திபிஸ் தாஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.<br>
<br>அதைத் தோடர்ந்து ஆமாச்சு சென்னை லினக்ஸ் குழும நண்பர்களை அழைத்தது பாராட்டினார்<br><br>பின்னர் ராமதாஸ் "கட்டற்ற மென்பொருள்" என முழக்கமிட கூட்டத்தில் இருந்த அனைவரும் முழக்கமிட்டனர்...அதைத் தொடர்ந்து "இது 21 நூற்றாண்டின் விடுதலை போர்" எனவும் கோஷமிடப்பட்டது.<br>
<br>அந்த நேரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.<br><br>பின்னர் "கட்டற்ற மென்பொருளின்" 25 ஆண்டு பிறந்த நாளை கிரன் சந்திராவால் கேக் வேட்டப்பட்டு கொண்டாடப்பட்டது.<br><br>பின்னர் "திபிஸ் தாஸ்" மேற்கு வங்காள தகவல் தொழில் நுட்ப அமைச்சர் , எப்படி கட்டற்ற மென்பொருட்களை எப்படி அரசு கனிணி மைமாக்ளுக்கு பயன்படுத்துவது எனப் பேசினார்,<br>
<br>அதைத்தொடர்ந்து தில்லி அறிவியல் குழமத் செயலாளர்"பிராபிர் புர்காஷ்தா" காப்புரிமை, படைப்புரிமை ஆகிவற்றை விரிவாகப்பேசினார்,<br><br>கடைசியாக "கிரன் சந்திரா" கட்டற்ற மென்பொருள் குழமம், இந்திய அவர்கள் கட்டற்ற மென்பொருள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி விளக்கினார்.<br>
<br>நிகழச்சியானது இனிதே முடிந்தது.<br><br><br>-- <br>அன்புடன்<br>அருண்<br><br>------------------------------<br><a href="http://ubuntu-tam.org">http://ubuntu-tam.org</a><br><a href="http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam">http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam</a><br>
<a href="http://lists.ubuntu.com/ubuntu-tam">http://lists.ubuntu.com/ubuntu-tam</a><br>------------------------------<br>
</div>