நண்பர்களே,<br><br><a href="https://wiki.ubuntu.com/TamilTeam?action=info" target="_blank">ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர்</a> (2006 ஜீன்) இவ் உபுண்டு தமிழ் குழுமத்தினை துவக்கினோம். சமர்ப்பணம் குழுவில் உடனிருந்த கணேஷ் செந்தில் என துவங்கிய ஆதரவு சிறிது காலத்திற்குள்ளாகவே இலங்கையிலிருந்து மயூரன், சேது, அருணன் ஆகியோரது ஊக்கத்துடன் பெருகியது.<br>





<br>தொடர்ந்து தி வாசுதேவன், இரமண்ராஜ், ஹரிஷ், உமா மகேஸ்வரன், சரவணன், ஹலீம், சுவாமிநாதன், விக்ரம் சாய் பாலாஜி, சிவகுமார்,&nbsp; பாலாஜி, உமா, கென்னத், பொன்னுசாமி, சௌமியா, ஹரிராம், முகுந்த், ஜகபர்தீன், ரத்தன், இரவி, அருண், ஸாதிஹா, இலட்சுமணன், ஜெயராம், ஸ்ரீராம், ஸ்ரீநிவாஸன், ஜனார்த்தனன், பார்த்தன், அண்ணா கண்ணன், கார்த்திகேயன்&nbsp; என தொடர்புகள் விரிய வளரத் துவங்கினோம். <br>





<br>தொடர்ந்து இருந்த வந்த அனைவரது ஆதரவின் காரணமாக இன்று நாம் புதிய அணிப் பொறுப்பாளர்களை பெறவிருக்கிறோம்.&nbsp; <br><br><a href="http://logs.ubuntu-eu.org/freenode/2008/04/19/%23ubuntu-tam.html" target="_blank">அணிப் பொறுப்பாளரிலிருந்து விலகிட விருப்பம் தெரிவித்து ஏற்க இயலுமா எனக் கேட்டதும்</a> ஏற்க முன்வந்த தங்கமணி அருண் மற்றும் அப்துல் ஹலீமுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இவர்கள் தலைமையில் இக்குழுமம் மென்மேலும் வளர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.<br>





<br>புதிய பொறுப்பாளர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.&nbsp; அவர்களுக்கு தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நல்கிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். <br><br>முழுமையாக பொறுப்புகளை இவர்களிருவருக்கும் விடுக்கும் வரை ஆதரவளிப்பதுடன் தொடர்ந்து இக்குழுவின் வேறு பணிகளில் ஈடுபடுவேன் எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்.<br>





<br>-- <br>அன்புடன்,<br>ஆமாச்சு.<br><br>