<div style="text-align: center;"><span style="text-decoration: underline;">புதிய சாத்திரம் வேண்டல்<br>தமிழ்த் தாய் - தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல்<br></span></div><br>ஆதி சிவன்பெற்று விட்டான் - என்னை<br>&nbsp;&nbsp;&nbsp; ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
<br>வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை <br>&nbsp;&nbsp;&nbsp; மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்<br><br>மூன்று குலத் தமிழ் மன்னர் - என்னை&nbsp; <br>&nbsp;&nbsp;&nbsp; மூண்ட நல்லன்பொடு நித்தம் வளர்த்தார்<br>ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்<br>&nbsp;&nbsp;&nbsp; ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்
<br><br>கள்ளையுஞ் தீயையுஞ்&nbsp; சேர்த்து - நல்ல<br>&nbsp;&nbsp;&nbsp; காற்றையும் வான வெளியையுஞ் சேர்த்துத்<br>தெள்ளுத் தமிழ்ப்புல வோர்கள் - பல<br>&nbsp;&nbsp;&nbsp; தீஞ்சுவைக் காவியஞ் செய்து கொடுத்தார்<br><br>சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்<br>&nbsp;&nbsp;&nbsp; தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
<br>நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்<br>&nbsp;&nbsp;&nbsp; நேர்ந்த தனைத்துந் துடைத்து முடிப்பான்<br><br>நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்பு <br>&nbsp;&nbsp;&nbsp; நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்<br>சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்<br>&nbsp;&nbsp;&nbsp; சேர்க்கை யனைத்தையுங் கொன்று நடப்பான்
<br><br>கன்னி பருவத்தில் அந்நாள் - என்றன்<br>&nbsp;&nbsp;&nbsp; காதில் விழுந்த திசைமொழி யெல்லாம்<br>என்னென்ன வோபெய ருண்டு - பின்னர்<br>&nbsp;&nbsp;&nbsp; யாவும் அழிவுற் றிறந்தன கண்டீர்<br><br>தந்தை அருள்வலி யாலும் - முன்பு <br>&nbsp;&nbsp;&nbsp; சான்ற புலவர் தவவலி யாலும்
<br>இந்தக் கணபட்டுங் காலன் - என்னை<br>&nbsp;&nbsp;&nbsp; ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சி யிருந்தான்<br><br>இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி<br>&nbsp;&nbsp;&nbsp; ஏதுசெய் வேன் ? என தாருயிர் மக்காள்!<br>கொன்றிடல் போலொரு வார்த்தை&nbsp; - இங்கு<br>&nbsp;&nbsp;&nbsp; கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!
<br><br>புத்தம் புதிய கலைகள் - பஞ்ச<br>&nbsp;&nbsp;&nbsp; பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்<br>மெத்த வளருது மேற்கே - அந்த<br>&nbsp;&nbsp;&nbsp; மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை<br><br>சொல்லவும் கூடுவதில்லை - அவை<br>&nbsp;&nbsp;&nbsp; சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
<br>மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த<br>&nbsp;&nbsp;&nbsp; மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்<br><br>என்றந்த பேதை உரைத்தான் - ஆ!<br>&nbsp;&nbsp;&nbsp; இந்த வசையெனக் கெய்திட லாமோ!<br>சென்றிடுவீ ரெட்டுத் திக்கும் - கலைச்<br>&nbsp;&nbsp;&nbsp; செல்வங்கள் யாவுங் கொணர்ந் திங்கு சேர்ப்பீர்!
<br><br>தந்தை&nbsp; யருள்வலி யாலும் - இன்று<br>&nbsp;&nbsp;&nbsp; சார்ந்த புலவர் தவவலி யாலும்<br>இந்தப் பெரும்பழி தீரும் - புகழ் <br>&nbsp;&nbsp;&nbsp; ஏறிப் புவிமிசை யென்று மிருப்பேன்<br><br>-- <br>அன்புடன்,<br>ம. ஸ்ரீ ராமதாஸ்.<br><br>[Sri Ramadoss M]<br>
Team Contact - Ubuntu Tamil Team<br>Wiki: <a href="https://wiki.ubuntu.com/sriramadas">https://wiki.ubuntu.com/sriramadas</a><br>IRC: amachu AT freenode Channel: #ubuntu-tam<br>Blog: <a href="http://aamachu.blogspot.com/">
http://aamachu.blogspot.com/</a>