மயூரன்,<br><br>தங்களின் இந்த சிந்தனை ஏற்புடையதே!&nbsp; சில இடங்களில் மட்டும் சொல் திருத்தியின்&nbsp; பயன்பாடு தமிழுக்கும் தேவை என்பதை உணர்கிறேன்.<br><br>ஆங்கிலத்தினைப் பொறுத்தவரை இது அவசியம் தான். ஏனெனில் ஒரே சொல்லை வேவ்வேறு வகையில் உச்சரிக்கமுடியும்.. எமது பெயரினை பலர் அப்படி தான்&nbsp; செய்கிறார்கள் :-)&nbsp; put -&nbsp; என்றால் புட் என்பதும் but என்பது பட் என்பதும் ஆங்கிலத்தில் தான்!
<br><br>தமிழில் அப்படிக் கிடையாது. &quot;தமிழ்&quot; என்கிற வார்த்தையை தலைக்&nbsp; கிழாக&nbsp; நின்றாலும்&nbsp; வேறு மாதிரி&nbsp; உச்சரிக்க இயலாது. ஆனால் &quot;ற&quot; &quot;ர&quot; போன்ற எழுத்துக்களைப்&nbsp; பயன்படுத்தும்&nbsp; போது ஏற்படக்கூடிய பிழைகள்... &quot;ண&quot; &quot;ன&quot; &quot;ந&quot; போன்றவற்றை பயன்படுத்தும் போது ஏற்படும் குழபங்கள்... இரு சொற்களை இணைக்க உதவும் போது விட்டுப்&nbsp; போகும் மெய் எழுத்துக்கள் முதலிய பொதுவான ஏற்படும் தவறுகளை அலசி அதற்கேற்றாற் போல் சொல்&nbsp; திருத்தி இருப்பது நலம் பயப்பதாய் அமையும்.
<br><br>மேலும் தாங்கள் கூறியிுருப்பது போல் மெய் எழுத்துக்களுடன் சொற்கள் துவங்காது போன்ற விதிமுறைகளையும் கருத்தில் கொண்டு இதற்கான செயற் திட்டத்தினை உருவாக்கலாம்.<br><br>இது குறித்து பங்களூர் சென்ற போது சில நிமிடங்கள் முகுந்தண்ணாவுடன்&nbsp; கலந்தாலோசிக்க நேரிட்டது. நாம் மேற்கூரிய விஷயங்களை aspell சொல் திருத்தி கருத்தில் எடுத்துக்&nbsp; கொள்கிறதா என்பதை aspell அறிந்தவர்களிமிருந்து அறிய விழைகின்றோம்.
<br><br>நன்றி.<br><br><div><span class="gmail_quote">On 2/11/07, <b class="gmail_sendername">மு.மயூரன் | M.Mauran</b> &lt;<a href="mailto:mmauran@gmail.com">mmauran@gmail.com</a>&gt; wrote:</span><blockquote class="gmail_quote" style="border-left: 1px solid rgb(204, 204, 204); margin: 0pt 0pt 0pt 0.8ex; padding-left: 1ex;">
<a href="http://mauran.blogspot.com/2007/02/blog-post.html" target="_blank" onclick="return top.js.OpenExtLink(window,event,this)">http://mauran.blogspot.com/2007/02/blog-post.html</a><br clear="all"><span class="sg"><br>
-- </span></blockquote></div><br>-- <br>அன்புடன்,<br>ஆமாச்சு.<br><a href="https://wiki.ubuntu.com/sriramadas">https://wiki.ubuntu.com/sriramadas</a><br><br>சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -&nbsp;&nbsp;அதைத்<br>தொழுது படித்திடடி பாப்பா
<br>செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்<br>தினமும் புகழ்ந்திடடி பாப்பா