<div style="text-align: center;"><span style="font-weight: normal;">ரிச்சர்ட் ஸ்டால்மேனின்,</span><br style="font-weight: normal;"></div><div style="text-align: center; font-weight: bold;"><span style="font-weight: normal;">
ஏன் திறந்த மென்பொருட்கள் கட்டற்ற மென்பொருட்களாகா?
</span><br><div style="text-align: left;"><br><span style="font-weight: normal;">கட்டற்ற மென்பொருள் என்று நாமழைப்பது, மென்பொருட்களை பயனொருவர் இயக்கவும், கற்று தமக்கேற்றாற் போல் மாற்றம் செய்யவும், அம்மென்பொருளை மாற்றியோ அல்லது மாற்றாதவாரோ விநியோகிக்கவும் கூடிய அடிப்படை உரிமைகளை பயனர்களுக்குத் தர வல்லது. விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டது.
</span><br style="font-weight: normal;"><br style="font-weight: normal;"><span style="font-weight: normal;">தனிப்பட்ட பயனரொருவருக்கானது என்றல்லாது கூட்டுறவோடு கூடிய பகிர்ந்து வாழ வல்ல ஸ்திரமான சமூகத்தினை ஊக்குவிப்பதால் இச்சுதந்திரமானது அத்தியாவசமானதாகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப் படுகிறது. நம்முடைய கலாச்சாரமும் வாழ்க்கை முறையும் டிஜிட்டலாக்கப் பட்டு வருகின்ற இந்த சூழ்நிலையில் இதன் மகத்துவம் மேலும் அதிகரிக்கிறது. ஒசைகள், உருவங்கள், சொற்கள் என அனைத்தும் டிஜிட்டலாகி வருகிற உலகத்தில் கட்டற்ற மென்பொருளை சுதந்திரத்திற்கு நிகராகக் கருத வேண்டியுள்ளது.
</span><br style="font-weight: normal;"><br style="font-weight: normal;"><span style="font-weight: normal;">கோடிக்கணக்கான மக்கள் இன்று கட்டற்ற மென்பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். பாரதம் மற்றும் ஸ்பெயினிலுள்ள பகுதிகளில் எல்லா மாணாக்கருக்கும் கட்டற்ற குனு/ லினக்ஸ் இயங்குத் தளத்தின் பயன்பாடுகள் போதிக்கப்படுகின்றன. பெரும்பாலான இந்த பயனர்கள் நாம் எந்த
</span><span style="font-weight: normal;">மகோன்னதமான நோக்கங்களுக்காக இந்த அமைப்பினையும் கட்டற்ற மென்பொருள் சமூகத்தினையும் ஏற்படுத்தினோமோ அதனை கேட்டிராதவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அமைப்பும் கட்டற்ற மென்பொருள் சமூகமும் இன்று சுதந்திரத்தைப் பற்றி அக்கறை கொள்ளாத "திறந்த மூலம்" என்ற வேறொரு தத்துவத்தின் மூலமாக அடையாளங் காணப்படுவது தான் இதற்கு காரணம்.
</span><br style="font-weight: normal;"><br style="font-weight: normal;"><span style="font-weight: normal;">கணினியினைப் பயன்படுத்துகின்ற ஒருவரின் சுதந்திரத்திற்காக கட்டற்ற மென்பொருள் இயக்கமானது 1983 லிருந்து குரல் கொடுத்து வருகிறது. பயனரொருவரின் சுதந்திரத்தினைக் மறுக்கக் கூடிய இயங்குதளங்களுக்கு மாற்றாக 1984 ல் நாம் குனு இயங்கு தளத்தினை உருவாக்கத் துவங்கினோம். எண்பதுகளின் காலக் கட்டங்களில் இந்த இயங்கு தளத்தின் இன்றியமையாத பாகங்களை உருவாக்கியதோடு அல்லாமல் அனைத்துப் பயனர்களின் சுதந்திரத்தினையும் காக்க வல்ல குனு பொது மக்கள் உரிமத்தினையும் உருவாக்கினோம்.
</span><br style="font-weight: normal;"><br style="font-weight: normal;"><span style="font-weight: normal;">ஆனால் கட்டற்ற மென்பொருளைப் பயன்படுத்தக் கூடிய உருவாக்கக்கூடிய அனைவருக்கும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் நோக்கங்கள் ஏற்புடையதாக இல்லை. இதன் காரணமாக 1998 ம் வருடம் கட்டற்ற மென்பொருள் இயக்கத்திலிருந்து விலகிய சிலர் "திறந்த மூலம்" என்ற பிரச்சாரத்தினைத் துவக்கலானார்கள். முதலில் கட்டற்ற மென்பொருட்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட வேண்டி முன்மொழியப் பட்ட இவ்வடை மொழியானது பின்னர் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் மாறான நோக்கங்களோடு அடையாளங்காணப்பட்டன.
<br><br>தொடரும்...<br style="font-weight: normal;"></span><br style="font-weight: normal;"></div></div>-- <br>அன்புடன்,<br>ஆமாச்சு.<br><a href="https://wiki.ubuntu.com/sriramadas" target="_blank" onclick="return top.js.OpenExtLink(window,event,this)">
https://wiki.ubuntu.com/sriramadas</a>
<br><br>சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்<br>தொழுது படித்திடடி பாப்பா<br>செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்<br>தினமும் புகழ்ந்திடடி பாப்பா
<br clear="all"><br>-- <br>அன்புடன்,<br>ஆமாச்சு.<br><a href="https://wiki.ubuntu.com/sriramadas">https://wiki.ubuntu.com/sriramadas</a><br><br>சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்<br>தொழுது படித்திடடி பாப்பா<br>செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
<br>தினமும் புகழ்ந்திடடி பாப்பா